ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல நடிகை ராதிகாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமாவிலும் சின்னத்திரையிலும் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்த ராதிகா, தற்போது நடிப்பு ஒருபக்கம் அரசியல் ஒரு பக்கம் என பிசியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராதிகா, 'நான் எப்போதும் என்னை பற்றியோ என் வேலை பற்றியோ பேச மாட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு ரொம்ப கொடுமையாக இருந்தது. படங்களில் நடித்து கொண்டிருந்த போது காலில் அடிபட்டது. மாத்திரைகள், பிசியோதெரபி பலனளிக்கவில்லை. மருத்துவர் பரிந்துரையின்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது.
அதேபோல் என்னுடைய மிக்கபெரிய தூண், வலிமை, தங்க இதயம் கொண்ட சரத்குமார் இந்த இரண்டு தினங்களாக என்னை குழந்தை போல் பார்த்துக் கொண்டார். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றியும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை அதிகமாக நேசிக்கவும், உங்களை பாராட்டிக் கொள்ளவும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என அந்த பதிவில் குறிப்பிட்டு உலக பெண்கள் தினத்திற்கான வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.