தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்குத் திரையுலகத்தில் சில பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் பூரி ஜெகன்னாத். ஆனால், அவர் கடைசியாக இயக்கிய 'லைகர், டபுள் இஸ்மார்ட்' ஆகிய படங்கள் சரியாகப் போகாமல் படுதோல்வி அடைந்தன. அதனால், அவரது இயக்கத்தில் நடிக்க தெலுங்கு ஹீரோக்கள் யோசித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை பூரி ஜெகன்னாத் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதை சொன்னாராம் பூரி. அந்தக் கதையைக் கேட்ட விஜய் சேதுபதி, கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் விரைவில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழி ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். அதனால், இந்தப் படத்தையும் பான் இந்தியா படமாக உருவாக்க பூரி முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.