ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். அவருடைய சினிமா தயாரிப்பில் நடிகை சார்மியும் ஒரு பங்குதாரராக இருக்கிறார். அவர்கள் கடைசியாகத் தயாரித்த 'லைகர், டபுள் ஐஸ்மார்ட்' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. பூரி இயக்கிய ஏழு படங்களில் சார்மி இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
தொடர் தோல்விகளால் தவித்த பூரி, தெலுங்கில் சில நடிகர்களை சந்தித்து தனது அடுத்த படத்தில் நடிக்க கோரிக்கை வைத்துள்ளார். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்றால் சார்மி இணை தயாரிப்பாளராக இருக்கக் கூடாது என அவர்கள் சொன்னதாகத் தகவல் வெளியானது.
அதன்பின் தமிழ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதையைக் கூறியிருக்கிறார் பூரி. கதை பிடித்துப் போன விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளார். பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. ஜுன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இப்படத்திற்கான பத்திரிகை செய்தியை நேற்று வெளியிட்டார்கள். அதில் இணை தயாரிப்பாளராக சார்மி இருப்பதும், புகைப்படத்தில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி இருப்பதும் பூரி மற்றும் சார்மி தங்களது தயாரிப்பு நட்பை இன்னமும் தொடர்கிறார்கள் என்பதை தெரிய வைத்துள்ளது.