இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மட்டுமல்லாது குடும்ப சுற்றுப்பயணமாகவும் அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருவதை ராம்சரண் வாடிக்கையாகவே வைத்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது மனைவி உபாசனா அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் உபாசனா கூறும்போது, “எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் மறக்காமல் குக்கர் ஒன்றை கையோடு கூடவே எடுத்து வந்து விட வேண்டும் என்பது ராம்சரணின் உத்தரவு. காரணம் வெளிநாட்டுக்கு சென்றாலும் தினசரி சாப்பாட்டில் அவருக்கு ஒரு இந்திய உணவாவது கட்டாயம் இருக்க வேண்டும். அதனாலேயே பெரும்பாலும் ராம்சரணின் தாயார் சில இந்திய உணவு வகைகளை ரெடிமேடாக எங்களுக்கு தயாரித்து கொடுத்து அனுப்பி விடுவார். நாங்கள் வெளிநாட்டில் ஹோட்டல்களில் இருந்து உணவை வரவழைத்து சாப்பிட்டாலும் கூட தங்கி இருக்கும் இடத்தில் அவருக்கு பிடித்த ஒரு நம்ம ஊரு ஸ்பெஷல் ஒன்றையும் சமைத்து விடுவோம். அதற்காகவே வீட்டிலிருந்து கையோடு குக்கர் ஒன்றையும் எடுத்துச் சென்று விடுகிறோம்” என கூறியுள்ளார்.