திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சமீபகாலமாகவே நடிகர் மம்முட்டி ஹீரோயிச கதைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தரும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி நண்பகல் நேரத்து மயக்கம், காதல் ; தி கோர், புழு, பிரம்மயுகம் என தொடர்ந்து அவரது படங்கள் நடிப்பிற்காக பேசப்பட்டு வருவதுடன் அவரது இன்னொரு வித்தியாசமான நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களை மம்முட்டி தற்போது அதிகம் தேர்வு செய்கிறார்,
அந்தவகையில் புழு, பிரம்மயுகம் படங்களை தொடர்ந்து கலம் காவல் என்கிற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. சொல்லப்போனால் வில்லன் நடிகரான விநாயகன் தான் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மம்முட்டி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் மம்முட்டியின் வில்லத்தனம் கலந்த பார்வையும் சிரிப்பும் நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.