இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் மோகன்லாலுக்கு கடந்தாண்டு வெளியான மலைக்கோட்டை வாலிபன், அவரே இயக்கிய நடித்த பரோஸ் இரண்டு படங்களும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை கொடுக்கவில்லை. என்றாலும் இந்த வருடத்தில் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான எம்புரான் மற்றும் தொடரும் என இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமைந்து நூறு கோடி வசூலையும் கடந்துள்ளன எம்புரான் படம் சில சர்ச்சைகளை எதிர்கொண்டாலும் கூட 200 கோடி வசூலை கடந்தது. தற்போது தொடரும் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று குறைந்த நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என மோகன்லாலின் அனைத்திந்திய கேரளா ரசிகர்கள் மன்றம் முடிவு செய்தது. இதை மோகன்லாலிடம் கூற, அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் மோகன்லால் தற்போது நடித்து வரும் ஹிருதயபூர்வம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. அதனால் இந்த ஹோட்டலிலேயே ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தொடரும் வெற்றி விழா கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதில் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் மற்றும் இயக்குனர் தருண் மூர்த்தி இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட மோகன்லால், கேக் வெட்டி சிலருக்கு ஊட்டியும் விட்டார். படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி ஆசையாக கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் கன்னத்தில் அன்பு முத்தமும் இட்டு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் மோகன்லால்.