ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நடிகர் விநாயகனும் சர்ச்சையும் என்று சொல்லும் அளவிற்கு பிரபல மலையாள நடிகர் விநாயகன் அடிக்கடி ஏதாவது வில்லங்கம் செய்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். விஷால் நடித்த 'திமிரு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார்.
இவர் இப்படி படங்களில் நடித்து பிரபலமானதை விட அவ்வப்போது பொது இடங்களில், அது போலீசார் என்று கூட பார்க்காமல் யாரிடமாவது வம்பிழுத்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இப்படி ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் ஒரு கடைக்காரரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு அதன்பிறகு அவர் மீது அங்குள்ள காவல் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட தனது அப்பார்ட்மென்ட்டில் இருந்து எதிரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் நபரை பார்த்து அநாகரிகமாக வார்த்தைகளில் திட்டியதுடன் தான் அணிந்திருந்த வேட்டியை கழற்றி கூட அசிங்கமான சைகை செய்தார் விநாயகன். பிறகு அதற்காக வருத்தம் தெரிவித்தும் வீடியோ வெளியிட்டார்.
இப்படி இரண்டு மாதங்கள் அமைதியாகப் போன நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்லம் பகுதியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் விநாயகன். அப்போது அங்குள்ள அஞ்சலம்மூடு என்கிற ஹோட்டலில் அவர் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தார். நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பும்போது ஹோட்டல் நிர்வாகிகளுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அவர் மது போதையிலும் இருந்தார்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரித்த போது, அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விநாயகன். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அதன் பிறகு அவரை ஜாமினில் விடுதலை செய்துள்ளனர். ஹோட்டல் நிர்வாகிகளுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் விநாயகன் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.