வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்குத் திரையுலகினருக்காக 'நந்தி விருதுகள்' வழஙகப்பட்டு வந்தது. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலமாகப் பிரிந்த பிறகு விருதுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா அரசு 'கட்டார்' விருதுகள் என தெலுங்குத் திரையுலகத்தினருக்காக புதிய பெயரில் விருதுகளை வழங்குவதாக அறிவித்து, சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல விருதுகளை அறிவித்தார்கள். நேற்று அந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றார்கள். 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசலில் ஒரு பெண் உயரிழந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனையும் கைது செய்தது தெலுங்கானா அரசு. அதனால், இந்த விழாவில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்வாரா என்ற ஒரு சந்தேகம் நிலவியது.
அதையெல்லாம் பொருட்படுத்தால் அல்லு அர்ஜுன் நேற்று நேரில் வந்து விருது பெற்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, முதல்வர் ரேவந்த் ரெட்டி அடுத்தடுத்து அமர்ந்திருந்ததும் பேசப்பட்டது.