தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்குத் திரையுலகினருக்காக 'நந்தி விருதுகள்' வழஙகப்பட்டு வந்தது. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலமாகப் பிரிந்த பிறகு விருதுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா அரசு 'கட்டார்' விருதுகள் என தெலுங்குத் திரையுலகத்தினருக்காக புதிய பெயரில் விருதுகளை வழங்குவதாக அறிவித்து, சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல விருதுகளை அறிவித்தார்கள். நேற்று அந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றார்கள். 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசலில் ஒரு பெண் உயரிழந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனையும் கைது செய்தது தெலுங்கானா அரசு. அதனால், இந்த விழாவில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்வாரா என்ற ஒரு சந்தேகம் நிலவியது.
அதையெல்லாம் பொருட்படுத்தால் அல்லு அர்ஜுன் நேற்று நேரில் வந்து விருது பெற்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, முதல்வர் ரேவந்த் ரெட்டி அடுத்தடுத்து அமர்ந்திருந்ததும் பேசப்பட்டது.