இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து விட்டது. இறுதிப்போட்டிக்கு சோம், ஆரி, பாலாஜி, ரியோ, கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து போட்டியில் இருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை வந்த நடிகர் கவின், பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து, திடீரென வெளியேறினார். இந்த சீசன் நிறைவு பெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இப்போதும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை பிக்பாஸ் வழங்கியுள்ளார். இந்த முறை பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே கேப்ரில்லா வெளியேறி விட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கேப்ரில்லாவின் ஸ்மார்ட் மூவ் என இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவிலும் வைரலாக பரவி வருகிறது.
மீதமிருப்பவர்களில் சோம், ஆரி, பாலா ஆகிய மூவரும் போட்டியின் இறுதிநாள் வரை நிச்சயம் இடம் பிடிப்பார்கள் என உறுதியாகிவிட்ட நிலையில் நாலாவது நபராக ரியோ இடம்பெறுவார் என தெரிகிறது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் ரம்யா பாண்டியன் போட்டியின் இறுதி நாளுக்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.