இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பெண் இயக்குனர் ஹலீதா சமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. சமுத்திரகனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படம் நாளை(பிப்., 12) வெளிவருவதாக இருந்தது. ஆனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் விதித்த நிபந்தனையால் பட வெளியீட்டில் சிக்கல் நீடித்தது. அதாவது தியேட்டரில் வெளியான 14 நாட்களுக்கு பிறகு ஓடிடியிலும் இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இப்படம் பிப்., 28ல் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகிறது.
இதுப்பற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கை : “ஏலே” திரைப்படம் தியேட்டரில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில் சில ஆச்சர்யகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் தியேட்டர்களை தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பகல் 3 மணிக்கு, உலகதொலைக்காட்சிகளில் முதல் முறையாக, நேரடியாக இத்திரைப்படத்தினை வெளியிடுகிறோம். திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும், ரசிகர்களுகான தரமான கதைகளையும் திரையரங்கு உட்பட அனைத்து தளங்களிலும் வழங்குவதில் எங்கள் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயல்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டரில் படங்கள் வெளியான பிறகு சின்ன படங்கள் என்றால் 30 நாட்களும், பெரிய படங்கள் என்றால் 50 நாட்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். புதிதாக இப்போது இது மாதிரியான ஒப்புதலுக்கு சம்மதம் சொன்னால் தான் படத்தை வெளியிடுவோம் என கூறி வருகின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச்சூழலில் தான் இந்தப்படம் கடைசியாக தியேட்டரும் வேண்டாம், ஓடிடியும் வேண்டாம் என நேரடியாக தியேட்டரில் வெளியிடும் முடிவுக்கு தயாரிப்பாளரை கொண்டு வந்துவிட்டது.