ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
2014ல் வெளிவந்த 'பண்ணையாரும் பத்மினியும்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். கடந்த ஆறு ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் வெளிவந்த படங்களில் சில பாடல்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்காத காரணத்தால் அவரால் தமிழில் இன்னும் முன்னணிக்கு வர முடியவில்லை.
இந்நிலையில் இந்தியத் திரையுலகில் அடுத்த பிரம்மாண்ட படம் என எதிர்பார்க்கப்படும் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளுக்கு அவர் இசையமைக்கிறார். ஹிந்திக்கு வேறு ஒருவர் இசையமைக்க உள்ளார்.
இதற்கு முன்பு விஜய் தேவரகொன்டா நடித்த 'டியர் காம்ரேட்' தெலுங்குப் படத்திற்கு இசையமைத்த ஜஸ்டினுக்கு தெலுங்கில் இரண்டாவது படம்தான் 'ராதே ஷ்யாம்'. தெலுங்கில் சில முன்னணி இசையமைப்பாளர்கள் இருக்க, ஜஸ்டினுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது தெலுங்குத் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.