2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

தெலுங்குத் திரையுலகில் பெரும் நடிகராக விளங்கியவரும், ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராக இருந்தவருமான மறைந்த என்.டி.ராமராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
என்.டி.ராமராவின் 98வது பிறந்தநாளை இன்று ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடி வருகிறார்கள். நடிகராக இருந்த என்டிஆர், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் பாணியைப் பின்பற்றி தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார். 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 1983ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல் முறை முதல்வராகப் பதிவியேற்றார் என்டிஆர். மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த என்டிஆர் 1996ம் ஆண்டு மறைந்தார்.
“அசாமிய பாடகரும், இசைக்கலைஞருமான பூபேன் ஹசரிகாவிற்கு எப்படி மரணத்திற்குப் பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ அதுபோல வழங்கப்பட வேண்டும். அவருடைய நூறாவது பிறந்தநாள் வர உள்ள நிலையில் அந்த உயரிய விருது வழங்கி அவரை கவுரவிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்படும் விருது தெலுங்கு மக்களுக்கான கவுரவமாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.