தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் குஷ்பு. கடைசியாக லஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தார். தற்போது கலர்ஸ் டிவிக்காக 'மீரா: ஒரு புதுக்கவிதை' என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இதன் கதாசிரியராகவும் பணியாற்றுகிறார்.
இந்த தொடர் வருகிற 28ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தொடரின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், ஈஸ்வர் ரகுநாதன், அரவிந்த் கதிர், அண்ணபூரணி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஜவஹர் இயக்குகிறார், அவ்னி டெலிமீடியா சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். குடும்ப வன்முறைகளை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் குடும்ப பெண்ணின் கதை.