தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பிக்பாஸ் சீசன்- 8 நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலேயே சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதோடு இந்த முறை ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் நாற்காலி, யார் காலி என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது அந்த விளையாட்டில் ஓடிய தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கு காலில் அடிபட்டது. நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை கை தாங்கலாக போட்டியாளர்கள் அழைத்து சென்று அமர வைத்தார்கள். அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு போட்டியாளரான சீரியல் நடிகர் தீபக்கிற்கும் அதே போன்று காலில் வலி ஏற்பட்டுள்ளது. அவரையும் ரவீந்திரனை போலவே 2 சக போட்டியாளர்கள் அழைத்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் அதைப்பார்த்து உண்மையிலேயே அவர்களுக்கு காலில் அடிபட்டதா? இல்லை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்று நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.