தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தனது அபிநயா கிரியேஷன் மூலம் ஏராளமான சின்னத்திரை தொடர்களை தயாரித்தவர் ஜேகே என்று அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணசாமி. மாண்புமிகு மாமியார், மகாராணி செங்கமலம், க்ரீன் சிக்னல், செல்லம்மா, மங்கள அட்சதை, கேள்வியின் நாயகனே, என் பெயர் ரங்கநாயகி. மாங்கல்யம். ஆடுகிறான் கண்ணன், தீர்க்கசுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, திருப்பாவை, அனுபல்லவி, வெள்ளைத் தாமரை, தேவதை உள்பட ஏராளமான தொடர்களை தயாரித்தார். இதில் திருப்பாவை மெகா தொடரை கதை, வசனம் எழுதி ஜேகே இயக்கினார்.
சின்னத்திரையின் ஏவிஎம் சரவணன் என்று அழைக்கப்பட்ட ஜேகே கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அது பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஜேகே கல்லூரிப் படிப்பை முடித்ததும் சுங்க இலாகாவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றிவர். ஜே.கேவின் மகன்கள் விஜய், ஆனந்த், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ஜே.கேவின் மனைவி ராதா கிருஷ்ணசாமி அபிநயா கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தயாரிப்பில் இறங்கினார்.
1996 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கோவை அனுராதா இயக்கத்தில் காஸ்ட்லி மாப்பிள்ளை என்கிற தொடரை முதல் தொடராக தயாரித்து ஒளிபரப்பியது. தொடர்ந்து அபிநயா கிரியேஷன் தொடர்கள் வெற்றி பெறவே, தனது சுங்க இலாகா பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் கதை இலாக்காவை தொடங்கி, மெகா தொடரில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டார்.
இன்று முன்னணி இயக்குனராக விளங்கும் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் சத்யா உட்பட ஏராளமான கலைஞர்களை தமிழ் திரை உலகிற்கும், சின்னத்திரை உலகிற்கும் தந்த நிறுவனம், ஜே.கேயின் அபிநயா கிரியேஷன்ஸ். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி தொடரின் இயக்குநர் பிரியன், செம்பருத்தி தொடரின் இயக்குனர் நீராவி பாண்டியன் ஆகியோரும் அபிநயா கிரியேஷன்ஸ் அறிமுகப்படுத்திய இயக்குனர்கள்தான்.