ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பவன் கல்யாண், அரசியல் கட்சி ஆரம்பித்து தோல்விகளை சந்தித்தவர். இருப்பினும் தனது விடாமுயற்சியால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவரது கட்சியை வெற்றி பெற வைத்தார். பவன் கல்யாணும் வெற்றி பெற்று துணை முதல்வராகி மக்களின் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரும், முன்னணி நடிகருமான ஜுனியர் என்டிஆர் அவர்களது கட்சிக்காக எந்த ஒரு பிரசாரத்தையும் மேற்கொள்ளவில்லை. இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் என்டிஆர் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள 'தேவரா 1' படத்திற்கான சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி, கூடுதல் கட்டண உயர்வுக்கு அனுமதி என ஆந்திர அரசு சார்பில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடுவுக்கும், பவன் கல்யாணுக்கும் நன்றி தெரிவித்திருந்தார் ஜுனியர் என்டிஆர். அதற்கு பவன் கல்யாண், “உங்களது பட வெளியீட்டிற்கு எனது வாழ்த்துகள் ஜுனியர் என்டிஆர் காரு. சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான என்டிஏ அரசு தெலுங்குத் திரையுலகத்திற்குத் தேவையானவற்றையும், ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'தேவரா 1' படத் தயாரிப்பு நிறுவனத்தின் நன்றிக்கு பதிலளிக்கையில், “தனி நபர்களின் அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் அதை மதித்து, தெலுங்கு திரையுலகத்திற்குச் சிறந்தவற்றையே செய்து வருகிறோம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போல திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களைத் தொந்தரவு செய்து ஒரு போதும் கீழே சாய்ந்துவிட மாட்டோம். அந்த ஆட்சியில் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பட்ட கஷ்டங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்,” என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.
முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பவன் கல்யாணுக்கும் அவர் நடித்து வெளியான படங்களுக்கும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.