தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்தவர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். அதையடுத்து வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றபோது தாங்கள் எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் தற்போது தான் இயக்கி வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற நான் பிழை என்ற பாடலில் இடம்பெற்ற நினைச்சா தோணும் இடமே என்ற கேப்ஷனுடன் ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டு இருந்த விக்னேஷ் சிவன், இன்று நயன்தாரா தன்னை இருக்க கட்டி அணைத்தபடி எடுத்துக்கொண்ட ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கு, நான் பிறந்த தினமே என்ற அதே பாடலில் வரும் கேப்ஷனை பதிவு செய்திருக்கிறார். இதற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.