இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சாமி என்பவரை தனது பண்ணை வீட்டில் வைத்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். முதலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் அங்கே முறைகேடாக வசதிகளை பெற்றார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது சிறையில் 100 நாட்களை கழித்து விட்ட தர்ஷன் தொடர்ந்து தனக்கு ஜாமீன் கேட்டு மனு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 27ம் தேதிக்கு அதன் விசாரணையை தள்ளி வைத்தது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15, 16, 17 எண் கொண்ட குற்றவாளிகள் மூவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.