ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
96 பட புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு வெளியான படம் ‛மெய்யழகன்'. கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்தனர். ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்ற இந்த படம் லாபகரமாகவும் அமைந்தது. உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த படம் வெளியானது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த படத்தை இப்போது பார்த்து பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மெய்யழகன் படம் பார்த்தேன். எளிமையான அழகான படம். நிறைய இடங்களில் அழுதேன். அரவிந்த்சாமி, கார்த்தி அருமையாக நடித்திருந்தனர். இயக்குனர் பிரேம் குமார் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளும், நன்றியும்...!'' என குறிப்பிட்டுள்ளார்.