இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'மார்கோ'. 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ஓடிடியில் வெளியாகி அதிலும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெற்றி பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. இந்த நிலையில் கேரள சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கொலை செய்பவர்களை ஹீரோக்களாக சித்தரிப்பதா என்று 'மார்கோ' படத்தை தாக்கி பேசி உள்ளார்.
கோழிக்கோட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது...
"சமீபகாலமாக வெளியாகும் பல சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. ரவுடிகளை படங்களில் மகான்கள் போல காட்டுகின்றனர். படங்களில் அதிக கொலைகள் செய்பவர் ஹீரோவாக அங்கீகரிக்கப்படுகிறார். அதைப்பார்த்து மாணவர்களும் ரவுடிகளாக மாறுகின்றனர். சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய (மார்கோ) ஒரு படத்தை பார்த்து சில பள்ளி மாணவர்கள் ரவுடி கோஷ்டியில் சேர்ந்ததாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது" என்றார்.