திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாகவே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 241 பேர் மரணத்தை தழுவினார்கள். ஒரே ஒரு பயணி மட்டும் தப்பித்தார். அது மட்டுமல்ல அந்த விமானம் விழுந்த பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி உணவு விடுதியில் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பல மாணவர்களும் கூட இந்த விபத்தில் பலியானார்கள். நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை இது ஏற்படுத்தியது. பலரும் தங்களது இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இந்த விபத்து குறித்து பேசும்போது, “நான் வளர்ந்தது படித்தது எல்லாமே ஆமதாபாத்தில் தான். அதிலும் விபத்து நடந்த இடத்திற்கு சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணி நகரில் தான் நான் படித்து வளர்ந்தேன்.. இப்போது விபத்து நடந்த இடம் எல்லாம் நான் சுற்றித்திரிந்த பகுதிகள் தான். அந்த நினைவுகள் இன்னும் எனக்கு பசுமையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட இடத்தில் இந்த விபத்து நடந்திருப்பதை நினைக்கும்போது என் மனம் மிகுந்த வேதனை தெரிகிறது. நான் மட்டுமல்ல, அங்கே இருக்கும் எனது நண்பர்கள் கூட அதிர்ச்சியில் இருக்கின்றனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.