‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இவர்கள் மூவரும் சேர்ந்துள்ள படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. பிரமாண்டமான ஆக்ஷன் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது நிறைவடைந்த பின்னர் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். வலிமை அப்டேட் கேட்டு அவர்கள் பலரையும் தொந்தரவு செய்தது சர்ச்சையானது. இதையடுத்து அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி அப்டேட் வெளியாகும் போனி கபூர் அறிவித்ததால் அஜித் ரசிகர்கள் சற்று அமைதியாகினர்.
இந்நிலையில் வலிமை குறித்த புதிய அப்டேட் ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில், "வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்", என அவர் குறிப்பிட்டுள்ளார். படம் நிறைவடையும் முன்பே திரையரங்கு உரிமை வியாபாரமாகிவிட்டதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.