ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை தீபா. இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், 'எங்களை யாராவது ஏமாற்றி விட்டால் அவர்களுக்காக காத்திருக்க வேண்டுமா? ஆண்களுக்கு மட்டும் தான் உணர்ச்சியா? எங்களுக்கு கிடையாதா? இளம் வயதில் கணவரை இழந்த பெண் யாருடனாவது போய்விட்டால் அவளுக்கு ஒரு பட்டம் சூட்டி வாழ்க்கையை முடித்துவிடுகிறார்கள்.
நீங்கள் ஏன் அவளுக்கு மறுமணம் செய்து வைக்கவில்லை. நாங்கள் பாடக்கூடாது, ஆடக்கூடாது, சிரிக்கக்கூடாது. அப்படி செய்தால் உங்களுக்கு கவுரவ குறைச்சல். நாங்கள் தாசிகள் என்றால், எங்களை அந்த நிலைக்கு மாற்றிய நீங்கள் யார்? ஊரில் கரகாட்டக்காரியை ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார்? நாங்கள் தாசிகளாக இருந்தாலும் எங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கிறோம். உங்களை போல் குடித்துவிட்டு ஊரை அழிக்கவில்லை' என்று பேசியுள்ளார்.